மனித குலத்திற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று பற்றி சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஏற்கனவே காவல்துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பூபாலன், கார்த்திகேயன் ஆகிய 2 பேர் வாட்ஸ்அப்பில் கரோேனா வைரஸ் தொற்று பற்றி பல வதந்திகளை பரப்பி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த இரண்டு இளைஞர்களையும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் பரிந்துரையின் பேரில் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
தமிழகத்தில் கரோனா பற்றி வதந்தி பரப்பிய பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குண்டர் சட்டப்படி தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.