பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய்யின் விலை சரிந்துள்ளது.
ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் விலை தொடர்பான போர் ஒன்றை சவுதி அரசு முன்னெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனா உட்பட சர்வதேச நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகள் மந்தமடைந்துள்ளன.
இந்தியா தனது தேவைக்கான கச்சா எண்ணெய்யில் சுமார் 83 சதவிதத்தை இறக்குமதி செய்கிறது. சவுதி அரேபியாவில் இருந்து ஒரு மாதத்திற்கு 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது.
பொதுவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் குறைந்தால் இந்தியாவிற்கு ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரத்து 700 கோடி செலவு குறையும். ஒரு பேரல் கச்சா எண்ணெய் 10 டாலர் குறைந்தால் பெட்ரோல், டீசல் விலை 5 முதல் 6 ரூபாய் வரை குறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது.
மிக குறுகிய காலத்தில் சுமார் 14 டாலர் அளவிற்கு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மிகப்பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், திடீரென பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.