அம்மாபட்டினத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து சட்ட நகல் எரிப்புப் போராட்டம்..!



மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அம்மாபட்டினத்தில் நேற்று 13.03.2020 வெள்ளிக்கிழமை குடியுரிமைச் சட்ட நகலை முஸ்லிம்கள் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கட்டுமாவடி மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அம்மாபட்டினத்தில் தொடர்ச்சியாக நேற்று 26 நாள்களை கடந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை அனைத்து ஜமாத் சார்பில் கிழக்கு கடற்கரை சாலையில் ஒன்றுகூடி குடியுரிமை திருத்த சட்ட நகல்களை எரித்து. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.



கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments