BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!



சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதுவரை 80 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் வருகிற மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பானை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், நட்சத்திர மதுக்கூடங்கள், அரசு மதுபான பார்கள் ஆகியவற்றையும் மூட முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments