வெளியூர் மரண அறிவித்தல்:- கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த KRM மக்கத்தம்பி அவர்கள்...



புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தின் முதல் திமுக ஒன்றிய செயலாளரும் கோட்டைபட்டிணத்தின் தற்பொழுதைய கழக ஊராட்சி செயலாளரும். ஆனா அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகியும் ஆணா அவர்களின் சகோதரர் கோட்டைபட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் அலி அவர்களின் பெரிய தந்தையுமான கோட்டைப்பட்டினம் பாவடித் தெருவில் வசித்து வரும் மானா தானா என்று அழைக்கப்படும் ஜனாப். KRM.மக்கத்தம்பி அவர்கள் இன்று 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் 

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments