கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ரெயில், பஸ் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதேபோல, திருச்சியில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம், திருச்சி-இலங்கை இடையே போக்குவரத்து சேவையை மே மாதம் 15-ந் தேதி வரை ரத்து செய்து அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் திருச்சி-இலங்கை இடையே காலை 9-40 மணிக்கு ஒரு முறையும், பிற்பகலில் 3.40 மணிக்கு ஒரு முறையும் என தினமும் இரு முறை விமானம் இயக்கப்பட்டு வந்தது. பயணிகள் போக்குவரத்து தவிர தினசரி சுமார் 2 முதல் 7 டன் வரை சரக்கு போக்குவரத்தும் நடைபெற்று வந்தது. ஊரடங்கு காரணமாக இந்த சேவைகள் அனைத்தும் தடைபட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.