கோபாலப்பட்டிணத்தில் மின் கட்டணத்தை சேவை கட்டணமின்றி செலுத்த நாளை (20.04.2020) கடைசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மின்சார கட்டணம் செலுத்த முடியாமல் இருப்பவர்களுக்கு உதவும் வண்ணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டிணம் கிளையின் சார்பாக கூடுதல் பணம் (கமிஷன்) இல்லாமல் மின்சார கட்டணம் செலுத்த செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் சில கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. எனவே இதன் காரணமாக நாளை 20.04.2020 (திங்கள்கிழமை) ஒரு நாள் மட்டுமே தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் மின்கட்டணம் செலுத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
✴மின் இணைப்பு எண்,சென்ற மாதத்தின் தொகையை கொண்டு சென்று கூடுதல் தொகை (கமிஷன்) இல்லாமல் மின் கட்டணத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மின் கட்டணம் செலுத்தாதவர்கள் இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு GPM மீடியா மற்றும் TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
தேதி&நாள்: 20.04.2020 ( திங்கள்கிழமை) நாளை
மின் கட்டணம் செலுத்தும் இடம்: தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல், தங்கமஹால் திருமண மண்டபம் அருகில், கோபாலப்பட்டிணம்.
குறிப்பு: கூடுதல் தொகை இல்லாமல் மின் கட்டணம் செலுத்த நாளையே (20.04.2020) கடைசி முகாமாகும்.
என்றும் சமுதாயப்பணியில்...,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கோபாலப்பட்டிணம் கிளை.
புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு:
9715503699, 8124150046
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.