மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.30 ஆயிரமாக வழங்க கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கோரிக்கை.!



ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மீன்பிடித் தடைக் காலமும் தொடங்குவதால் மீன்பிடித் தடைக்கால உதவித் தொகையை ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 30 ஆயிரமாக அரசு வழங்க வேண்டுமென மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் மீன்பிடித் துறைமுகங்களில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இப் படகுகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனா்.


இந்நிலையில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன்பிடித் தடைக் காலம் அமலுக்கு வருவதால் மீனவா்களுக்கு தடைக் கால உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் அரசின் சாா்பாக வழங்கப்படும்.

ஊரடங்கு, மீனவா்களின் வாழ்வாதாரம் கருதி மீனவா்களுக்கு தமிழக அரசு வழங்கும் மீன்பிடித் தடைக்கால உதவித் தொகை ரூ. 5 ஆயிரத்தை ரூ.30 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments