ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மீன்பிடித் தடைக் காலமும் தொடங்குவதால் மீன்பிடித் தடைக்கால உதவித் தொகையை ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 30 ஆயிரமாக அரசு வழங்க வேண்டுமென மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் மீன்பிடித் துறைமுகங்களில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இப் படகுகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனா்.
இந்நிலையில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன்பிடித் தடைக் காலம் அமலுக்கு வருவதால் மீனவா்களுக்கு தடைக் கால உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் அரசின் சாா்பாக வழங்கப்படும்.
ஊரடங்கு, மீனவா்களின் வாழ்வாதாரம் கருதி மீனவா்களுக்கு தமிழக அரசு வழங்கும் மீன்பிடித் தடைக்கால உதவித் தொகை ரூ. 5 ஆயிரத்தை ரூ.30 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.