ஓரியூர் பட்டமங்கலம் கண்மாய்கரை பகுதியில் சிலர் துப்பாக்கி மூலம் பறவைகளை வேட்டையாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள ஓரியூர் பட்டமங்கலம் கண்மாய்கரை பகுதியில் சிலர் துப்பாக்கி (ஏர்கன்) மூலம் பறவைகளை வேட்டையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி, எஸ்.பி.பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பறவைகளை வேட்டையாடிய அதே பகுதியை சேர்ந்த கலந்தர் அன்சாரி, தமீம் அன்சாரி, முபாரக், முகமது ஹனீபா, செய்யது முகமது ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.