கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் மளிகை, மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையில் கடந்த 3-ந் தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி, 5-ந் தேதி (நேற்று ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு வீடுகளில் எரியும் அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு, வீட்டுவாசலில் ஒளிவிளக்கு அல்லது செல்போன் டார்ச் ஏந்தி 9 நிமிடங்கள் நில்லுங்கள் என்றார்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் நேற்று இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் பொதுமக்கள் அனைத்து விட்டு, வீட்டுவாசலில் ஒளி விளக்குகளை ஏற்றினார்கள்.
இதையடுத்து அறந்தாங்கியில் பட்டாசு வெடித்ததில் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜான்சன் என்பவரது வீட்டில் நின்ற தென்னை மரத்தில் தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.