கரகத்திக்கோட்டை ஊராட்சியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடக்கம்.!



கோட்டைப்பட்டினம் அடுத்த கரகத்திக்கோட்டை ஊராட்சி மேலபாப்பனூர் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது.


இதனை சரிசெய்யும் வகையில், ஊராட்சி மன்றம் நிதியிலிருந்து ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மணமேல்குடி ஒன்றியக்குழுதலைவர் பரணிகார்த்திகேயன் தலைமை தாங்கி, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனியார், கவுன்சிலர் கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன், ஒப்பந்தகாரர் ராஜாகண்ணு, கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments