ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்க தமிழக அரசு விதித்திருப்பதை ரத்து செய்ய - நவாஸ்கனி எம்பி கோரிக்கை



ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்க தமிழக அரசு   விதித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் என நவாஸ்கனி எம்பி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., இன்று தமிழக அரசின் செய்தித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா பேரிடர் காலத்தில் துயரத்தை அனுபவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவது தடை செய்யப்படுகிறது என்றும் மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய உத்தரவை அரசு ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் .

அரசு வழங்கும் நிவாரண உதவி அனைத்து மக்களுக்கும் போதுமானதாக இருக்கும் என இருந்துவிட முடியாது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் அந்தந்த ஊர்களில் இருக்கும் தன்னார்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் நிவாரண உதவிகளும், உணவுப் பொருட்களும் வழங்கி வருகின்றன.

இந்த மனிதாபிமான செயலை தடுத்து நிறுத்த அரசு  எண்ணுவதை கைவிடவேண்டும்.

மக்கள் கூடுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை என்றால், காவல்துறையின் மூலம் முறைப்படுத்தி இந்த மனிதாபிமான சேவையை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முற்றிலுமாக நிவாரண பொருட்கள் வழங்க தடை விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் வேண்டும்‌.

அரசும் முழுமையான நிவாரணம் கொடுக்காமல், கொடுப்பவர்களையும் கொடுக்க விடாமல் செய்வது பேரிடர் காலத்தில் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும்.

எனவே, நிவாரண பொருட்களை தொடர்ந்து தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் வழங்கிட அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments