கரோனா பாதிக்கப்பட்டதால் பிறந்து ஆறு வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று இறந்துள்ளது அமெரிக்காவில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.9 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், 47,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1998 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கரோனாவால் அதிகம் பாதிப்படைந்துள்ள அமெரிக்காவில், பிறந்து ஆறு வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கரோனாவால் உயிரிழந்துள்ளது.
அமெரிக்காவில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால் பலியானோர் எண்ணிக்கை 5000 ஐ கடந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியில், பிறந்து ஆறு வாரங்களே ஆன குழந்தை ஒன்று கரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை உட்படுத்தப்பட்டு வந்தது. சிகிச்சை பலனளிக்காத நிலையில், அந்த குழந்தை நேற்று உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுவே அமெரிக்காவின் மிக இளம்வயது பலி ஆகும்.
இதுகுறித்து கனெக்டிகட் ஆளுநர் நெட் லாமென்ட் ட்விட்டரில் கூறுகையில்,“ கனெக்டிகட் மாநிலத்தின் ஹார்ட்போர்ட் பகுதியைச் சேர்ந்த 6 வார பச்சிளங்குழந்தையின் உயிரை கரோனா வைரஸ் எடுத்துள்ளது. மருத்துவமனைக்கு மோசமான நிலையில் வந்த அந்தக் குழந்தையை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இந்தக் குழந்தையின் இறப்பு மருத்துவர்களையும், கனெக்டிகட் மாநில மக்கள் அனைவரையும் கடும் மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. அந்தக் குழந்தை இறந்த செய்தி என் மனதை சுக்குநூறாக உடைத்துவிட்டது.அமெரிக்காவில் மட்டுமல்ல உலகளவில் கரோனா வைரசுக்கு இளவயதில் பலியான குழந்தை இதுவாகத்தான் இருக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.