மணமேல்குடி அருகே வேட்டணிவயல் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது.!



மணமேல்குடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவரை போலீசார் நேற்று கைது செய்தனர். சாராயம் குடிக்க சென்ற ஊராட்சி செயலாளரும் சிக்கினார்.


கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் பதுக்கி வைத்து ரூ.100-க்கு விற்ற மதுபாட்டில்கள் ரூ.600 வரை விற்று வருகின்றனர். அவர்களையும் போலீசார் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே வேட்டணிவயல் கிராமத்தில் சிலர், குடிசையில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மணமேல்குடி போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சிய வேட்டணிவயலை சேர்ந்த தியாகராஜன், சாராயம் குடிக்க வந்த வெள்ளூர் ஊராட்சி செயலாளர் தம்பிதுரை(48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments