புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோட்டைப்பட்டினத்தில் மதுபோதைக்காக சேவிங் லோசனை அருந்திவிட்டு 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கவும் மதுவிற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்கும் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை நகர் பகுதிகள் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூடுவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரையில் 19 பேர் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 10 பேருக்கு பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்து உள்ளது. மீதமுள்ள 9 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் யாருக்கும் இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இவ்வாறு இதில் அவர் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.