ஆவுடையார்கோவில் அனைத்து வர்த்தக சங்கத்தினர் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள்.!



கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் பொதுமக்களை வெளியில் வருகின்றனர்.


இதையடுத்து மாற்றுத்திறனாளிகள், தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து ஆவுடையார்கோவில் அனைத்து வர்த்தக சங்கத்தினர் சார்பில், 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர்கிங், துணை தாசில்தார் ஜபருல்லா, வர்த்தக சங்க தலைவர் பொன்மாணிக்கம், செயலாளர் கலந்தர், பொருளாளர் மோகன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கினார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஆவுடையார்கோவில் அனைத்து வர்த்தக சங்கத்தினர் செய்து இருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments