கோபாலப்பட்டிணத்தில் பாரத ஸ்டேட் வங்கி நுழைவாயிலில் இருந்து காட்டுக்குளம் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் நட்டாணிபுரசகுடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் பாரத ஸ்டேட் வங்கி நுழைவாயிலில் இருந்து காட்டுக்குளம் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள சீமை கருவேல மரங்கள் மிகவும் அடர்த்தியாக வளர்ந்து மேலே செல்லும் மின் கம்பிகளில் உரசிக்கொண்டு இருந்தது. இதனால் கோபாலப்பட்டிணத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.
எனவே நாட்டாணிபுரசகுடி ஊராட்சி மன்ற தலைவர் நேற்று 10.04.2020 வெள்ளிக்கிழமை அன்று கள ஆய்வு மேற்கொண்டு ஜேசிபி(JCB) இயந்திரத்தின் மூலமாக சாலையின் இருபுறமும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி சாலையை விரிவுபடுத்தினார். மேலும் அந்த பகுதியில் கிடந்த குப்பைகள் மற்றும் கோபாலப்பட்டிணம் சில பகுதிகளில் குவிந்திருந்த குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டது.
கொரோனா வைரசின் தாக்கத்தால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் இந்த வேளையில் மக்களின் நலனில் அக்கறை கொண்டு சுகாதார நடவடிக்கைகளை சிறப்பாக செய்து வரும் ஊராட்சி தலைவருக்கு GPM மீடியா சார்பா வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.