GPM அவுலியா நகர் பள்ளி பொது நல சேவை மையம் சார்பாக GPM மீடியா-விற்கு வாழ்த்து மடல்.!



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு)

சிறப்பான முறையில் நமதூர் மக்களுக்கு அன்றாட நிகழ்வுகளையும், பல பயனுள்ள செய்திகளையும் மற்றும் இன்றைய காலகட்டத்தில் 144 தடை உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலிகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு


உதவும் வகையில் ஊர் மக்களின் ஒத்துழைப்போடு பொருளாதாரத்தை சேகரித்து சரியான முறையில் கொண்டு சேர்க்கும் GPM மீடியா-விற்கு GPM அவுலியாநகர் பள்ளி பொது நல சேவை மையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

தங்களின் குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்றோம். இந்த இக்கட்டான கால கட்டத்தில் தொழிலின்றி வறுமையில் தவிக்கும் நமது ஊர் ஏழை எளிய மக்களுக்கு உதவும் உங்களின் முயற்சியை கண்டு GPM அவுலியா நகர் பள்ளி பொது நல சேவை மையம் உறுப்பினர்கள் அனைவரும் மனதார பாராட்டுகின்றோம்.

தங்களின் கோரிக்கையை ஏற்று எங்களின் குழுமத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. அதனடிப்படையில் எங்கள் குழுமம் சார்பாக ரூ.15,000 தருவதில் மகிழ்ச்சியடைகின்றோம். இது சிறிய தொகையாக இருந்தாலும் இன்னும் நமது ஊர் முக்கிய குழுமங்கள் இதை விட பன்மடங்கு உங்களுக்கு உதவுவதற்கு ஒரு ஊக்கமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.GPM மீடியா எடுக்கும் அனைத்து நல்ல முயற்சிக்கும் எங்களின் GPM அவுலியா நகர் பள்ளி பொது நல சேவை மையம் உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருவோம் என்பதை இந்தநேரத்தில் தெரிவித்து கொள்கின்றோம்.

வல்ல இறைவன் அவன் அருளால் உங்களின் இந்த முயற்சியை வெற்றிப்பெறச் செய்வானாக!

ஏழை எளிய மக்களின் பசி,பட்டினியை போக்குவானாக!

நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் இந்த கொரோனா நோயிலிருந்து முழு உலக மக்களையும்,நம் அனைவரையும் காப்பாற்றுவானாக!ஆமீன்

இப்படிக்கு..,
GPM அவுலியா நகர் பள்ளி பொது நல சேவை மையம்,
கோபாலப்பட்டிணம்.

நாள்: 11.04.2020 சனி
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments