கரோனா தடுப்பில் இந்திய மரபு முறை மருத்துவம் பற்றி மருத்துவ வல்லுநர்களுடன் தமிழக முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்குப் பின் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வல்லுநர்களின் பரிந்துரைகளை ஏற்று நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க "ஆரோக்கியம்" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கரோனாவை எதிர்க்க நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுர குடிநீரை மக்கள் குடிக்கலாம். சிகிச்சை பெற்ற பின் மக்கள் உடல் நலத்தைப் பேணவும் நிலவேம்பு, கபசுர குடிநீரைக் குடிக்கலாம். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மட்டுமே நிலவேம்பு, கபசுர குடிநீர் உதவும், கரோனா சிகிச்சைக்கு அல்ல. சென்னையில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் சூரணப்பொட்டலங்கள் வழங்கப்படும்.
கரோனா கட்டுப்பாட்டு பகுதியில் (containment zone) ஒரு லட்சம் கபசுர குடிநீர் பொட்டலம் தரப்படும். மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலைக் கருத்தில் கொண்டு "ஆரோக்கியம்" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, நிலவேம்பு, கபசுர குடிநீர் வழங்க ஆரோக்கியம் என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பின்பு தலைமைச் செயலக ஊழியர்கள், போலீசாருக்கு நிலவேம்பு, கபசுர குடிநீரை முதல்வர் வழங்கினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.