கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி சார்பாக கிருமி நாசினி தெளிப்பு..!



இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


இதனால் ஊரடங்கு உத்தரவை மதித்து பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே தங்கி உள்ளனர். 

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் தாலுகா, நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் நேற்று 05.04.2020 ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் இரு சக்கர வாகனம் மூலம் கிருமி நாசினி கோபாலப்பட்டிணத்தில் சாலைகள், கட்டிடங்கள், வீடுகள் என பல இடங்களில் தெளிக்கப்பட்டது.

அதேபோல கோபாலப்பட்டிணம் நகரின் முக்கிய இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கோபாலபட்டிணத்தின் இரண்டு நுழைவாயில்களில் ஊருக்குள் நுழையும் நபர்கள் கைகளை கழுவுவதற்கு ஹேண்ட் வாஷ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கோபாலப்பட்டிணம் கிராம எல்லையில் இளைஞர்கள் செக்போஸ்ட் அமைத்து அந்த வழியாகச் செல்வோரை நிறுத்தி கை, கால்களை நன்றாக ஹேண்ட் வாஷ் கொண்டு கழுவிய பிறகே ஊருக்குள் அனுமதிக்கின்றனர்.








கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments