இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவையில் வசிக்கும் கிறிஸ்தவ சகோதரர் ஒருவர் மரணித்து விட்டார். இறந்தவரின் உறவினர்கள் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு வந்துவிட்டனர்.
இதனால் அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் இறந்தவரின் குடும்பத்தினர் இராமநாதபுரம் மாவட்ட தமுமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி கோரினர்.
அதனடிப்படையில் கோவை வடக்கு மாவட்டம் தமுமுகவின் உதவியால் கோவையில் இறந்த இராமநாதபுரம் கிறிஸ்தவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாநில செயலாளர் கோவை சாதிக், மருத்துவசேவை அணி மாநில துணைச்செயலாளர் முகமது ரபி, கோவை மருத்துவசேவை அணி மாவட்ட பொருளாளர் பைசல், முன்னாள் மருத்துவ அணி மாவட்ட செயலாளர் சபி ஆகியோர் உடனிருந்து செய்தனர்.
தகவல்:
தமுமுக மமக ஊடகப்பிரிவு,
கோவை வடக்கு மாவட்டம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.