கோபாலப்பட்டிணம் ஷாஹீன் பாக் ஒருங்கிணைப்பாளர்கள் வரவு மற்றும் செலவு கணக்குகள் ஜமாஅத்தினரிடம் ஒப்படைப்பு.!



கோபாலப்பட்டிணம் ஷாஹீன் பாக் ஒருங்கிணைப்பாளர்கள் வரவு மற்றும் செலவு கணக்குகளை ஜமாஅத்தினரிடம் ஒப்படைத்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், NPR மற்றும் NRC சட்டங்களை அமல்படுத்தக்கூடாது எனவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் கடந்த 01.03.2020 அன்று கோபாலப்பட்டிணம் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு தொடர்ச்சியாக (21.03.2020 ) 21 நாட்கள் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் வரவு மற்றும் செலவு கணக்குகளை கடந்த 18.04.2020 அன்று தற்போதைய ஜமாஅத் நிர்வாகத்திடம் (ஜனாப். RSM. அன்சாரி, ஜனாப். M. சித்திக் அலி, ஜனாப். J. முஹம்மது ஹுசைன், ஜனாப். கோகன நைனா முகம்மது , ஜனாப். KM. அப்துல் காதர்) கோபாலப்பட்டிணம் ஷாஹீன் பாக் ஒருங்கிணைப்பாளர்கள் (முகமது யாசின்,சாகுல் ஹமீது,முகமது ஹனிபா,ராஜா முகமது,செய்யது முகமது) ஆகியோர் ஒப்படைத்தனர்.

இதற்காக பொருளாதார உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், ஊர் பொது மக்களுக்கும், ஜமாத்தார்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும், இளைஞர்களுக்கும் மற்றும் உடல் உழைப்பு செய்த அனைவருக்கும் கோபாலப்பட்டிணம் ஷாஹீன் பாக் ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியினை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு., 
ஷாஹீன் பாக் ஒருங்கிணைப்பாளர்கள், 
கோபாலப்பட்டிணம்.

தகவல்: முகமது யாசின், ஒருங்கிணைப்பாளர் குழு.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments