அறந்தாங்கி வர்த்தக சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம்.!



அறந்தாங்கி வர்த்தகர்கள் சங்கம் சார்பில், கடந்த 3 தினங்களாக அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள வர்த்தகர்களிடம் கொரோனா நிவாரண பொருட்களாக 60 சிப்பம் அரிசி, 150 கிலோ பருப்பு, 150 லிட்டர் சமையல் எண்ணெய், காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பெறப்பட்டது.


பின்னர் நிவாரணமாக வாங்கப்பட்ட அனைத்து பொருட்களையும் வர்த்தக சங்க தலைவர் வரதராஜன், பொருளாளர் சலீம், செயலாளர் செந்தில்குமார் உள்பட குழுவினர் அறந்தாங்கி தாசில்தார் சிவக்குமாரிடம் ஓப்படைத்தனர். நிவாரண பொருட்கள் அனைத்தையும் தாசில்தார் அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள கொரோனா தடுப்பு குழுவினர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் வழங்கினார். 

மேலும் அறந்தாங்கியில் உள்ள அம்மா உணவகம் மூலமாக சமையல் செய்து காலை, மாலை என இரு வேளைகளிலும் உணவு வழங்க நகராட்சி ஆணையர் முத்துகணேசிடம் அறிவுறுத்தியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments