அறந்தாங்கி பகுதியில் இருந்து டெல்லி சென்று வந்த யாருக்கும் கொரோனா தொற்று கிடையாது.! அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் இருந்த அனைவரும் வீடு திரும்பினர்.!



டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, புதுக்கோட்டை, அரசர்குளம், அன்னவாசல், பெருங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15 பேர் அறந்தாங்கி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதி கப்பட்டனர்.


அங்கு அவர்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது, ஆய்வில் 15 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

இருப்பினும் தொடர்ந்து சில நாட்கள் வார்டில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த அவர்கள் 15 பேரும் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் தமது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments