நாட்டாணிபுரசக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்.!



கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க ஓன்றியக்குழு உறுப்பினர்கள் புண்ணியவயல் செந்தில்குமரன், பொன்பேத்தி சுந்தரபாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.


இதையடுத்து திருப்பெருந்துறை ஊராட்சியில் 13 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை ஒன்றியக்குழு தலைவர் செல்வி உமாதேவி வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை புண்ணியவயல், பாண்டிபத்திரம், பூவலூர், கீழக்குடி வாட்டாத்தூர், பொன்பேத்தி, நாட்டானி, புரசக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 100 நபர்களுக்கு வழங்கினார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments