அறந்தாங்கியில் பட்டாசு வெடித்த 10 வாலிபர்கள் மீது வழக்கு.!



பிரதமர் மோடி கடந்த 5-ந்தேதி வீடுகளில் எரியும் அனைத்து விளக்குகளை அனைத்து விட்டு, வீட்டு வாசலில் விளக்கு அல்லது செல்போன் டார்ச் ஏந்தி 9 நிமிடங்கள் நில்லுங்கள் என்று கூறினார்.


இதையடுத்து பொதுமக்கள் அனைத்து வீடுகளில் விளக்குகளை ஏற்றினார். அப்போது அறந்தாங்கி அங்காளம்மன் கோவில் தெருவில், அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பட்டாசு வெடித்ததில் ஜான்சன் என்பவரது வீட்டில் நின்ற தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த 10 வாலிபர்கள் மீது அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments