அம்மாப்பட்டினம் ஷாகின் பாக் சார்பில் ஏழை, எளிய மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்.!



அம்மாப்பட்டினம் ஷாகின் பாக் சார்பில் அம்மாப்பட்டினம் மற்றும் மணமேல்குடி பகுதியில் ஏழை,எளிய மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.


கொரோனா வைரஸ் பரவலால் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் அம்மாப்பட்டினம் பகுதியில் ஆதரவற்றோர் மற்றும் சாலையோரம் வசித்து வரும் மக்களுக்கு உணவு வழங்க அம்மாப்பட்டினம் ஷாஹின் பாஃக் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்று 13.04.2020 புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் ஷாஹின் பாஃக் குழு இளைஞர்கள் அம்மாப்பட்டினம் மற்றும் மணமேல்குடி பகுதியில் சாலையோரம் வசித்து வரும் ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு சுமார் 50 உணவு பொட்டலங்களை வழங்கினர்.

தகவல்: ஆசிக், அம்மாப்பட்டினம்.




கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments