கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேலைகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர். இதனால் சில குடும்பங்கள் உணவுக்கு வழியின்றி சிரமம் அடைந்தனர்.
இந்த நிலையில் அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைபட்டியை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் தினசரி கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தினக் கூலியினால் குடும்பம் நடத்தும் ஏழை மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த முஸ்லிம் இளைஞர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் உள்ளூர் பொது மக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு கடன் வழங்கி வருவதாகவும், இதில் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.2,500 வழங்கப்படுகிறது. இந்த பணத்தை இயல்பு நிலை திரும்பிய பிறகு 60 நாட்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த கடன் உள்ளூர் மக்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.