கோபாலப்பட்டிணம் M.K.R கல்வி அறக்கட்டளை சார்பில் 350 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கல்.!



புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் M.K.R கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் 24 முதல் மே-3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. அனைவரின் வாழ்க்கையும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் அன்றாடக்கூலிகள், விளிம்பு நிலை மக்கள், நடுத்தர வர்க்கத்தினர், வணிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உணவுக்கு கூட வழி இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களின் துயரம் களைய அரசு, தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோபாலப்பட்டிணத்தில் செயல்பட்டு வரும் M.K.R. கல்வி அறக்கட்டளை மூலம் கணபதிபட்டிணம் (அரசநகரிப்பட்டினம்), மீமிசல், SPமடம், ஏம்பகோட்டை மற்றும் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த ஏழை எளிய குடும்பங்கள் மற்றும் நாட்டாணி புரசகுடி, மீமிசல் ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்கள் என 350 குடும்பங்ளுக்கு சுமார் ரூ.1000 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

நட்டாணிபுரசக்குடி ஊராட்சி செயலாளர் மதி முன்னிலையில் தலா 10 கிலோ அரிசி பை மற்றும் மளிகை பொருட்கள் என 350 பேருக்கு நேற்று 28.04.2020 M.K.R. கல்வி அறக்கட்டளை நிறுவனத் தலைவரும் முன்னாள் நட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவருமான M.K.R.முகம்மது மீராசா சமூக விலகல் அடிப்படையில் வழங்கினார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் பஷீர், துணை ஊராட்சி மன்ற தலைவர் உதயம்.J.தாஹீர், மீனவ தலைவர் பஷீர் அஹமது, OSM.முஹம்மது அலி ஜின்னா,மீமிசல் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், மீமிசல் கவுன்சிலர் ரமேஷ் மற்றும் பொன்பேத்தி கவுன்சிலர் சுந்தரபாண்டியன் ஆகியோர் உடனிருந்து வழங்கினர்.

தகவல்: M.K.R.முகம்மது மீராசா







கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments