ஆவுடையார்கோவில் வட்டார உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் மானியத்துடன் கூடிய டிராக்டர்கள்: எம்எல்ஏ ரெத்தினசபாபதி வழங்கல்.!



ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட 4 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.25 லட்சம் மதிப்புள்ள டிராக்டர்களை அறந்தாங்கி  எம்எல்ஏ ரெத்தினசபாபதி வழங்கினார்.


அறந்தாங்கி வேளாண்மை விரிவாக்க மையத்தில்  நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 2019-20 ம் நிதி ஆண்டில் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களான புதுவாக்காடு, வேட்டனூர்-, வெளிவயல் மற்றும் வேள்வரை  ஆகிய குழுக்களுக்கு தலாரூ. 5 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வேளாண் பணிக்கான டிராக்டர்களை எம்எல்ஏ ரெத்தினசபாபதி வழங்கினார்.

இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர்(பொறுப்பு) சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்புராஜ், வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பெரியசாமி, வேளாண் துணை இயக்குநர்(மாநில திட்டங்கள்) மோகன்ராஜ் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் செல்வராஜ், அட்மா திட்ட வட்டார மேலார் ஜகுபர் அலி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments