புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வீடுவீடாக சென்று ஃபித்ரா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் மாவட்ட துணைச் செயலாளர் ஒளி முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி ஃபித்ரா விளக்கஉரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி ஃபித்ரா வினியோகத்தை துவக்கிவைத்தார்.
மருத்துவ அணிச்செயலாளர் பரக்கத் கனி. சுற்றுசூழல் அணிச்செயலாளர் சாகுல் அமீது, தொழில் நுட்ப அணிச்செயலாளர் முகம்மது ஹாலித் ஒன்றிய செயலாளர் நோக்கியா சாகுல், ஒன்றிய துணைச் செயலாளர் அலியார், ஒன்றிய பொருளாளர் நாகூர் கனி உள்ளீட்ட நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் கலந்துக்கொண்டனர்.
சுமார் 1,25,000 ரூபாய் மதிப்பிலான 2டன் அரிசி தேவை உடையவர்களுக்கு நகர மாணவரணி செயலாளர் சேக் பரீத் மற்றும் தொண்டரணிச் செயலாளர் கலந்தர் மைதீன் ஆகியோர் வீடுவீடாக கொண்டு சேர்த்தனர். அரிசியுடன் கொரோனா தடுப்பு முக கவசம் கொடுக்கப்பட்டது.முன்னதாக நகர பொருளாளர் அப்துல் கரீம் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் நகர செயலாளர் ஜகுபர் சாதிக் நன்றி கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.