அறந்தாங்கி பகுதியில் ரூ.4 கோடி மோசடியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது.!



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எழில் நகரை சேர்ந்த வர் கார்த்திக் (வயது 31). இவர் அறந்தாங்கி பகுதியில் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் பணத்துக்கு வட்டி வாங்கி தருவதாக கூறி ரூ.4 கோடி வரை வசூல் செய்து தலைமறைவானார்.

இதையடுத்து பணத்தை கொடுத்தவர்கள் அறந்தாங்கி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் கார்த்திக்கை குண்டர் சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments