தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த மையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு விடைத்தாள்களை திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் 1,200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
ஆசிரியர்கள் வந்து செல்ல வாகன போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.