புதுக்கோட்டையில் நண்பருடன் குளிக்க சென்ற போது குளத்தில் மூழ்கி வாலிபர் பலி.!



நண்பருடன் குளிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.


புதுக்கோட்டை டவுன் கே.எல்.கே.எஸ்.நகரை சேர்ந்த முகமது மைதீனின் மகன் முகமது உசேன் (வயது 29). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு வந்திருந்தார். 

இந்த நிலையில் நேற்று காலை புதுக்கோட்டை தானேதி குளத்தில் குளிப்பதற்காக முகமது உசேன் தனது நண்பருடன் சென்றுள்ளார். அப்போது நண்பர் அருகில் சென்ற நிலையில் முகமது உசேன் குளத்தில் இறங்கி குளித்துள்ளார். அப்போது அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், டவுன் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து முகமது உசேனின் உடலை மீட்டனர். 

மேலும் அவரது உடலை டவுன் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பருடன் குளிக்க சென்றவர் குளத்தில் மூழ்கி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments