பெரம்பலூரில் மது குடித்ததை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் ஆலம்பாடி ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அப்துல்ரசாக். இவருடைய மனைவி சாராம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள். இதில் 4-வது மகன் சதாம் உசேன் (வயது 19). அப்துல்ரசாக் ஏற்கனவே இறந்து விட்டார். சதாம் உசேன் பெரம்பலூரில் உள்ள கான்கிரீட் கம்பிகள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உடையவரான சதாம் உசேன் ஊரடங்கினால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், மது கிடைக்காமல் திண்டாடி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், சதாம் உசேன் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு இரவில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை சாராம்மாள் திட்டி, கண்டித்துள்ளார்.
இதையடுத்து கோபத்துடன் சதாம் உசேன் வீட்டை விட்டு வெளியே சென்றார். சாராம்மாள் பக்கத்து வீட்டிற்கு சென்று விட்டார். அப்போது மீண்டும் சதாம் உசேன் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் சாராம்மாள் தனது வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, வீட்டின் ஒரு அறையில் உள்ள மின்விசிறியில் சாராம்மாளின் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் சதாம் உசேன் தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த சாராம்மாள் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் சதாம் உசேனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சதாம் உசேன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மது குடித்ததை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.