ஊரடங்கு காலங்களிலும் அரசின் முஸ்லிம் விரோத போக்கு.!



உத்திர பிரதேசம் மாநிலம் அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இவர்களை போலீசார் ஊரடங்கு காலங்களில் சத்தமின்றி கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட சஃபோரா சர்கர், மீரன் ஹைதர், ஷிஃபால் ரஹ்மான், ஆசிப் இக்பால் தன்ஹா உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் உத்திர பிரதேசத்திலும் போலீசார் முஸ்லிம்களை குறி வைத்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் இந்திய அரசு முஸ்லிம் எதிர்ப்பை கொரோனா காலங்களிலும் பகிரங்கமாக காட்டி வருவது அப்பட்டமாக தெரிகிறது என்கின்றனர் பொதுமக்கள்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments