ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதை கண்டித்து, பிரதமர் அப்துல் மஹ்திக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நவம்பர் மாத இறுதியில் பிரதமர் பதவியை அப்துல் மஹ்தி ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு ஈராக்கின் புதிய பிரதமராக முன்னாள் தகவல் தொடர்புத்துறை மந்திரி முகமது தவுபிக் அலாவியை, அதிபர் பர்ஹாம் சாலி நியமித்தார். ஆனால் புதிய மந்திரிசபை அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் போதுமான ஆதரவு கிடைக்காததால், முகமது தவுபிக் அலாவி பதவி விலகினார்.அதனை தொடர்ந்து, உளவுத்துறையின் முன்னாள் தலைவர் முஸ்தபா அல் காதிமி புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் அவரது நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் ஈராக்கின் புதிய பிரதமர் பதவி ஏற்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது.இந்த நிலையில் முஸ்தபா அல் காதிமி தலைமையில் புதிய மந்திரிசபை அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் உள்ள 255 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் முஸ்தபா அல் காதிமிக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதனை தொடர்ந்து ஈராக்கின் பிரதமராக முஸ்தபா அல் காதிமி அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்றார். மேலும் அவரது தலைமையிலான மந்திரி சபையில் 15 மந்திரிகள் பதவி ஏற்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.