கட்டுமாவடி முதல் ஏனாதி வரை உள்ள கடலோர பகுதியில் பலத்த காற்று; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.!



மணமேல்குடி கடலோர பகுதிகளான கட்டுமாவடி முதல் ஏனாதி வரை உள்ள கடற்கரை பகுதியில் நேற்று காலை முதல் பலத்த காற்று வீசியது.


இதனால் கடலோர பகுதிகளில் உள்ள மரங்கள் வேகமாக ஒடிந்து விழும் நிலையில் ஆடியது. மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் புழுதிக்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். 

மேலும் கடலில் பலத்த காற்று வீசுவதால் மீன் பிடிக்க செல்லக்கூடிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மணமேல்குடி மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments