மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய குடும்பத்தில் கரோனா தொற்றுக்குள்ளான ஒன்றரை வயது ஆண் குழந்தை, ஏழாவது நாளில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வியாழக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்புவோர் மாவட்ட எல்லைகளில் கண்காணிக்கப்பட்டு 20}க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசுக் கட்டடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றனர். இதன்படி கடந்த மே 18ஆம் தேதி கறம்பக்குடி வட்டம், மந்தக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் தமது ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டை திரும்பினர்.
இவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டபோது, பெற்றோருக்கு கரோனா இல்லை என்பதும், ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பதும் 19ஆம் தேதி இரவு உறுதிப்படுத்தப்பட்டு, 20ஆம் தேதி ராணியார் மருத்துவமனை வளாகத்திலுள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டது.
குழந்தையுடன் தாயும் அனுமதிக்கப்பட்டார். 7 நாட்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு புதன்கிழமை குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா இல்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை அக்குழந்தைக்கு மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி பொம்மை மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கித் தந்து வாழ்த்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
அப்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ம. சந்திரசேகரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் கூறியது; குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் கல்லூரியின் மருத்துவத் துறைத் தலைவர் பாபு ஆனந்த், குழந்தைகள் மருத்துவத் துறைத் தலைவர் இங்கர்சால், உதவி மருத்துவர் வைரமணி ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
குழந்தையின் இரு நுரையீரல்களும் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, ஆக்ஸிஜன் செறிவூட்டல் முறைப்படி அதிகளவு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. செயற்கை சுவாசம் பயன்படுத்தப்படவில்லை. மேலும், நோய் எதிர்ப்பு மாத்திரைகளும் தாராளமாக வழங்கப்பட்டன. இவற்றால் குழந்தை இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது என்றார் மீனாட்சிசுந்தரம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.