புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் முறைகேடா? புகார் அளிக்க போலீசார் வேண்டுகோள்.!



புதுக்கோட்டை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

தமிழக அரசால் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணமாக இலவசமாக வழங்கப்படும் ரேஷன் பொருட்களை குறைவாக வழங்குவது, பதுக்கல் மற்றும் கடத்தல் போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். 

இதுபோன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடுவோர் பற்றி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு, புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments