ஊரடங்கு தளர்வு எதிரொலி: ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் விசைப்படகு பழுது பார்க்கும் பணி தொடக்கம்.!



தமிழகத்தில் மீன்வளத்துறை சார்பில், ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.

அதன்படி, இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15-ந் தேதியில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகுகள் கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி பார்ப்பது வழக்கம்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால் படகுகளின் உதிரி பாகங்கள் கடை திறக்கப்படாததால் வேலை பார்க்க முடியாமல் தவித்து வந்தனர். 

இந்நிலையில் தமிழக அரசு ஒரு சில கடைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டதால் சில கடைகள் திறக்கப்பட்டன. அதில் உதிரி பாகங்கள் கடையை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை பழுதுபார்க்கும் பணியை தொடங்கி விட்டனர். மேலும் படகில் புது பலகை மாற்றுதல், என்ஜின் வேலை, இறக்கை சரிபார்த்தல், வர்ணம் அடித்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments