ஊர்குளம் தொடர்பாக தாங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தமைக்காக நாகை மாவட்ட பாஜக நிர்வாகிகள் தமிமுன் அன்சாரியை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி தலைவருமான தமிமுன் அன்சாரியிடம் நாகை மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் சந்தோஷ், தனது ஊர் கோயில் குளம் தொடர்பாக சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருக்கிறார். அதனை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்ற தமிமுன் அன்சாரி அதனை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
இதனால் பூரிப்படைந்த நாகை மாவட்ட பாஜக இளைஞரணிச் செயலாளர் சந்தோஷ், தமிமுன் அன்சாரியை அவரது அலுவலகத்தில் சந்தித்து குளம் விவகாரத்தில் தமிமுன் அன்சாரி காட்டிய அக்கறைக்கும், உதவிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு ஆரோக்கியமான அரசியலாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் கலசம் சேதம் அடைந்து அது கீழே விழுந்த நிலையில், அதனை உடனடியாக சீரமைத்து பொருத்த தமிமுன் அன்சாரி நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதனால் இவர் மீது பாஜக, இந்து முன்னணி உட்பட அனைத்து தரப்பினரும் நல்ல அபிப்ராயம் வைத்து நட்பு பாராட்டி வருகின்றனர்.
மதத்தையும், மக்கள் பணியையும் ஒன்றாக இணைத்து தமிமுன் அன்சாரி குழப்பிக்கொள்வதில்லை என்றும், இன்னும் சொல்லப்போனால் அத்திவரதர் தரிசனத்திற்கு நாகை தொகுதிகுட்பட்ட ஏராளமானோருக்கு சிறப்பு பரிந்துரைக் கடிதம் வழங்கினார் எனவும் அவரை பற்றி மனிதநேய ஜனநாயக கட்சியினர் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.