ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி அட்டைகளுக்கு கோதுமை வழங்க தமுமுக கோரிக்கை.!



ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி அட்டைகளுக்கு கோதுமை வழங்க வேண்டும் என தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி அட்டைகளுக்கு கோதுமை வழங்கப்படுவதில்லை. குறிப்பாக ரேஷன் அட்டைகளுக்கு வழங்க வேண்டிய கோதுமைகள் அனைத்தும் கள்ள சந்தைகளில் விற்கப்படுகிறது. எனவே இதனை தடுத்து நிறுத்தி அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் குறைந்த பட்சம் 5 கிலோ அளவுக்கு கோதுமை வழங்கப்பட வட்ட வழங்கல் அலுவலர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அவ்வாறாக நடவடிக்கை எடுக்க தவறினால் வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தை தமுமுக சார்பில் நிர்வாகளின் முன்னிலையில் பொதுமக்கள், கூட்டணி கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒன்று திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு: 9790282250, 9942002536

தகவல்: சேக் அஜிமல்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments