அம்மாப்பட்டினம் அருகே விச்சூர் ஊராட்சியில் CCTV கேமரா அமைப்பு.!



அம்மாபட்டினம் அருகே விச்சூர் ஊராட்சியில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.


கோட்டைப்பட்டினம் டிஎஸ்பி.. சிவராமன் மணமேல்குடியில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வேண்டுகோளின்படி, மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் விச்சூர் கொடி மரம் பஸ் நிறுத்தம் அருகே 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இந்த பகுதியில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்த ராஜன் தலைமை வகித்தார். மண்டல அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் சிசிடிவி கேமராவின் பயன்பாட்டை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிராம மக்கள், பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments