அம்மாபட்டினம் அருகே விச்சூர் ஊராட்சியில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
கோட்டைப்பட்டினம் டிஎஸ்பி.. சிவராமன் மணமேல்குடியில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வேண்டுகோளின்படி, மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் விச்சூர் கொடி மரம் பஸ் நிறுத்தம் அருகே 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இந்த பகுதியில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்த ராஜன் தலைமை வகித்தார். மண்டல அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் சிசிடிவி கேமராவின் பயன்பாட்டை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிராம மக்கள், பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.