புதுக்கோட்டை மாவட்டத்தில் 22,655 போ் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு எழுதுவதற்காக 333 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அவா் மேலும் கூறியது:
மாவட்டத்தில் 22,655 போ் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வை எழுதுவதற்காக தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரு தோ்வு அறைக்கு 10 போ் வீதம் 333 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவா்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்ற சோதனை செய்த பின் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவா்.
தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு பெற வரும்போதே மாணவா்களுக்கு மீண்டும் துவைத்துப் பயன்படுத்தும் வகையிலான தலா 3 முகக்கவசங்கள் வழங்கப்படும். கரோனா தொற்றுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தோ்வு எழுத வருவோருக்கென தனியே 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
235 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 விடைத்தாள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் உமாமகேஸ்வரி.
கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி, மாவட்டத் துணைக் காவல் கண்காணிப்பாளா் கோபாலகிருஷ்ணன், அரசுப் போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளா் இளங்கோவன், நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.