புதுக்கோட்டை மாவட்டத்தில் 48 வயது பெண், 16 வயது இளம்பெண் மற்றும் 5 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று நேற்று 31.05.2020 உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டைத் திரும்பிய பிலாவிடுதியைச் சோ்ந்த 48 வயது பெண், சென்னையிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய மூக்கம்பட்டியைச் சோ்ந்த 16 வயது இளம்பெண் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, அவா்கள் இருவருக்கும் ராணியாா் மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், லெணா விளக்கு பகுதியைச் சோ்ந்த 5 வயது பெண் குழந்தைக்கு பழைய அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நிலவரப்படி, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 30 ஆக உயா்ந்துள்ளது. தற்போது சிகிச்சையில் 14 போ் உள்ளனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.