புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மின்னல் தாக்கி காடபிள்ளையார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீதரன் மகன் கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் (19) பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வபோது மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் மாவட்டத்தில் புதுக்கோட்டை, கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் தோட்டத்திற்கு மாங்காய் பறிக்க சென்றபோது பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தமிழ்ச்செல்வன் கீரனூர் அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது. அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கீரனூர் போலீசார் குளத்தூர் வட்டாச்சியர் விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு நேரத்தில் கல்லூரி மாணவர் இறந்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.