மீமிசல் வியாபாரிகள் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு வர்த்தக சங்கத்தின் சார்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்று பரவி வருவதால் நாளை 25.06.2020 வியாழன் ஒரு நாள் மட்டும் பால் கடை மற்றும் மெடிக்கல் தவிர மற்ற கடைகள் அனைத்தையும் அடைக்குமாறு வர்த்தக சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் 26.06.2020 வெள்ளிக்கிழமை முதல் மதியம் 1 மணிக்குள் அனைத்து கடைகளும் அடைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை 25.06.2020 முதல் 30.06.2020 வரை அனைத்து நகைக்கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது மாஸ்க் அணிந்து வருமாறு வர்த்தக சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு.,
ஐக்கிய வர்த்தக சங்கம்
மீமிசல்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.