ஜெய்ஸ்ரீராம் என்று கூற மறுத்த 18 வயது வாலிபர் மீது பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த சிலர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கொரோனாவின் கோரத்தாண்டவம், வடமாநிலங்களை தாக்கிய புயல், பொருளாதார நெருக்கடி என நாடே நிலைகுலைந்து போயுள்ள நிலையில் மதவெறி வன்முறையும் சேர்ந்து நாட்டிற்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது.
இந்நிலையில் பீகார் மாநிலம் மோதிஹரி நகரில் 18 வயது முஹம்மது இஸ்ரேல் என்ற வாலிபரை ஜெய் ஸ்ரீராம் என கூற வலியுறுத்தி சில கும்பல் மிரட்டியுள்ளது. மேலும் அவ்வாறு கூறாவிட்டால் உன்னை வெட்டுவோம் என்றும் அந்த கும்பல் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்த வாலிபரை அந்த கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. இதனால் படுகாயம் அடைந்த முஹம்மது இஸ்ரேல் மோதிஹரி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மெஹ்சி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வாலிபர் தரப்பில் அளித்துள்ள புகாரில், பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த சிலர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அவர்கள் 7 பேர் அடங்கிய கும்பல் என்றும் கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்கியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
முஹம்மது இஸ்ரேல் கழுத்தில் கத்தியால் கீறிய காயங்களும் உள்ளன. இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
கொரோனா பரவலை தடுக்க ஒட்டு மொத்த நாடே ஒற்றுமையுடன் போராடி வரும் சூழலில் இந்துத்வா சிந்தனை கொண்டவர்களும் ஊடகங்களும் முஸ்லிம்களை குறி வைத்து செயல்பட்டு வருவது வேதனை அளிப்பதாகும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.