கொரோனா தொற்று எதிரொலி: வெறிச்சோடிய மணமேல்குடி மீன் மார்க்கெட்.!



கொரோனா ஊரடங்கு காரணமாக மணமேல்குடி மீன் மார்க்கெட், சுமார் 60 நாட்களுக்கும் மேலாக செயல்படாமல் இருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மீன் மார்க்கெட் செயல்பட தொடங்கியது.


மீன்பிடி தடை காலத்தின்போது மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. தடை காலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றதால் மீன் வரத்து அதிகமானது. இதனால் கடந்த 10 நாட்களாக மீன் விற்பனை சமூக இடைவெளியுடன் மும்முரமாக நடைபெற்றது. மீன்கள் வாங்க ஏராளமான மக்கள் மணமேல்குடி சந்தைப்பேட்டைக்கு வந்து சென்றார்கள். 

இந்நிலையில் மணமேல்குடி பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் தங்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக மீன் மார்க்கெட் மற்றும் சந்தைப்பேட்டை பகுதிக்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்கின்றனர். 

மேலும் வியாபாரிகளும் வரவில்லை. இதனால் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள மீன் மார்க்கெட், காய்கறி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments